- கீழ்க்கண்ட பட்டியல் http://bit.ly/jemo2020stories எனும் தொடுப்பிலும் உள்ளது(சமீபத்திய கதைகளுக்கு இந்த தொடுப்பிலுள்ள ஆவணத்தை உசாவலாம்)
- ஓவியம் பல்லவன்
https://www.jeyamohan.in/130602
ஓலைச்சுவடி இதழ் வழங்கும் எழுத்தாளர் ஜெயமோகன் நேர்காணல் சுனில் கிருஷ்ணன் கேள்விகள்.
ஓலைச்சுவடி இதழ் வழங்கும் எழுத்தாளர் ஜெயமோகன் நேர்காணல் சுனில் கிருஷ்ணன் கேள்விகள்
பகுதி – 2. ஓலைச்சுவடி இதழ் வழங்கும் எழுத்தாளர் ஜெயமோகன் நேர்காணல் கி.ச. திலீபன் மற்றும்
பெரு.விஷ்ணுகுமார் கேள்விகள்பகுதி – 3---0கருத்துத் தெரிவி
- https://www.jeyamohan.in/130722
அன்பு ஜெ..
கோவையில் தங்களுடன் பேசிக்கொண்டிருந்த போது இலக்கியத்துக்கு என்று பிரத்யேக சேனல் ஆரம்பிக்க போகிறோம் உங்களது ஆதரவு வேண்டும் என்றேன். தொடக்க விழாவுக்கு உங்களை அழைத்தேன், தாங்களும் வருவதாக சொன்னீர்கள். நன்றி.
தற்போது உள்ள சூழ்நிலையில் விழா எதுவும் எடுக்கவில்லை, நேரடியாக சமூக வளைதளங்கள் மூலம் YouTube ல் Shruti TV Literature சேனல் தொடங்கப்பட்டு விட்டது,சேனல் சுட்டி :
https://www.youtube.com/channel/UCW1Eo2DbGgHjc0zk9wCi2Bw
இந்த சேனலில் தாங்கள் சென்னையில் ஆற்றிய உரையினை பதிவேற்றியுள்ளோன்.
(மார்ச் 2 2019)
ஆகுதி வழங்கும்
மரபை விரும்புவதும் வெறுப்பதும் எப்படி ? ஜெயமோகன் சிறப்புரை
https://www.jeyamohan.in/118880
தொடர்ந்து ஆதரவு தரும் தங்களுக்கும் விஷ்ணுபுரம் வட்ட நண்பர்களுக்கும் நன்றி..
---
கபிலன்.
shruti.tv
---
சென்னை கட்டணக்கூட்டம்
நான் எடுக்கும் குறிப்புகள் என்பவை ஒரு அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கவே. உதாரணமாக இந்தக் கட்டண உரை இருபகுதிகள். இருபகுதிகளிலும் ஏழு துணைப்பகுதிகள். அவற்றுக்குள் சராசரியாக ஆறேழு கருத்துக்கள். இந்தக் கட்டமைப்பை உருவாக்கிக்கொள்ளாமல் நான் மேடையேறுவதில்லை. இதிலிருந்து மேலே செல்வேன், ஆனால் இதிலிருந்து அகன்று செல்லமாட்டேன். இதனால் என் உரை ஒருபோதும் முன்னரே திட்டமிட்ட நேரத்தைக் கடந்து வளர்வதில்லை. கூடிப்போனால் ஐந்துநிமிடம் நீளக்கூடும். நான் கடிகாரத்தை பார்ப்பதில்லை. முடித்துவிட்டு நேரம் பார்க்கையில் ஏறத்தாழ சரியாகவே இருக்கும்.
பிறர் உரைகளில் எனக்கு சிக்கலாக இருப்பது அவர்கள் நினைவுகூரும் போக்கில் பேசிச்செல்வது. உரை எதைநோக்கி என்பது எனக்குள் இருக்கும் என்பதனால் அவர்கள் பேசிப்பேசி வளைந்துசெல்கையில் அமைதியிழப்பேன். நினைவுகூரப்படுவன ஒன்றோடொன்று இயல்பாக இணைவுகொண்டிருப்பதும் இல்லை. இன்னொன்று பொய்உச்சங்கள். இதோ பேச்சு முடியவிருக்கிறது என எண்ணும்போது மீண்டும் ஒன்று நினைவுக்கு வர அவர்கள் தொடர்கையில் என் உள்ளத்தில் நான் உருவாக்கிக் கொண்டிருக்கும் உரையின் கட்டமைப்பு குலைகிறது. உரைக்கு கட்டமைப்பு ஒன்றை நாம் உருவாக்கிக் கொள்வது அவ்விரு பிழைகளையும் தவிர்க்கும். அதை கேரளத்தின் மாபெரும் பேச்சாளரான எம்.கே.சானு மாஸ்டரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.
ஆனால் என் உரைகளை எங்குபேசினாலும் என்னால் முடிந்தவரை தீவிரமாக, முடிந்தவரை ஆழமாக ஆற்றவேண்டும் என்பதே என் எண்ணம். பல அரங்குகளில் என்னிடம் அமைப்பாளர்கள் நிகழ்ச்சிக்கு முன்பே “எங்க ஆடியன்ஸ் கொஞ்சம் சாதாரணம்தான்.. அதுகேத்தாப்ல பேசினா நல்லது” என்பார்கள். நான் அந்த சமரசத்தை செய்துகொள்வதில்லை. கல்லூரிகளில் மாணவர்களுக்கு எந்த அறிவார்ந்த பயிற்சியும் இருக்காது என எனக்கும் தெரியும். ஆனால் அவர்களிடமும் தீவிரமாகவே பேசவேண்டும் என நினைக்கிறேன். அவர்கள் அறியாத தீவிர அறிவுலகம் ஒன்று இருக்கிறது என வேறு எப்படித்தான் அவர்கள் தெரிந்துகொள்வார்கள்? ஆகவே வழக்கமான செய்திகள் கிடையாது. வழக்கமான உணர்ச்சிகளும் இருக்காது. குட்டிக்கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள் சொல்லமாட்டேன். அனைத்தையும்விட முக்கியமாக ஒரு கருத்தை பலமுறை வெவ்வேறு சொற்களில் விளக்க மாட்டேன். என் வழி உருவகங்கள் படிமங்கள் வழியாக பேசுவது. நிகழ்வுக்குறிப்புகளை உருவகங்களாக ஆக்கிக்கொள்வது.
என்னிடம் தமிழகத்தின் தேர்ந்த பேச்சாளர் ஒருமுறை சொன்னார். “உங்க பேச்சிலே அழகான பல விஷயங்கள் சொல்றீங்க. ஆனால் என்ன பிரச்சினைன்னா சொல்லிட்டே போறீங்க. நம்மாட்கள் அப்டியே விட்டிருவாங்க. இங்க எந்தக்கருத்தையும் மூணுமுறை தொடர்ச்சியா சொல்லணும். ஒருமுறை சொன்னதும் அப்டியே இன்னொரு வகையா திருப்பிச் சொல்லணும். ஒரு உதாரணம் சொல்லிட்டு மறுபடியும் அதே கருத்தைச் சொல்லி நிறுவிட்டு அடுத்ததுக்கு போகணும்”. அவரே பேசிக்காட்டினார். “கம்பராமாயணம் ஒரு செவ்வியல்நூல். அதாவது அது ஒருகிளாஸிக், கிளாஸிக்கைத்தான் செவ்வியல்னு சொல்லுங்க. தமிழிலே பல செவ்வியல்நூல்கள் இருந்தாலும் கம்பராமாயணம்தான் செவ்வியல்களிலே உச்சம். அதனாலேதான் பாரதி யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்னு முதல்ல சொல்றான். தமிழிலே முதன்மையான செவ்வியல்நூல் கம்பராமாயணம்’. கம்பராமாயணம் ஒரு செவ்வியல்நூல் என்னும் ஒற்றைவரியாக நான் அதைச் சொல்லிச்செல்வேன். அதை தவிர்க்கவேண்டும் என்றார்.
நேர்ப்பேச்சில் குறிப்புகளும் உட்குறிப்புகளுமாக நூறுசெய்திகளை ஒரே சமயம் கொட்டும் அறிஞர் அவர். மேடையில் துளித்துளியாக பரிமாறுவார். அதுதான் தமிழ் சராசரி அரங்கினரின் அறிவுநிலை என எனக்கும் தெரியும். ஆனால் நான் அவ்வாறல்லாமலும் பேச்சு இருக்கமுடியும் என நினைக்கிறேன். அதற்காகவே என்னை வாசித்து அறிந்து எனக்காக வரும் வாசகர்கள், என் கருத்துக்களுடன் ஏற்கனவே ஒரு தொடர்பு உள்ளவர்கள் அடங்கிய அரங்குக்காக பேசுகிறேன். அதற்கு கட்டண உரை அரங்கு மிக உகந்தது, முந்நூறுரூபாய் கட்டி பேச்சைக்கேட்க வருபவர்கள் பொழுதுபோக்க வருபவர்கள் அல்ல.
--
கட்டண உரை, ஐயங்கள்
--
என் மேலும் விழாவின் மேலும் இந்தச் சிறுவிமர்சனத்தை மட்டுமே உங்களால் கண்டடைய முடிந்தது என்பது நிறைவளிக்கிறது.
இத்தனை கூர்ந்து நோக்கிய நீங்கள் அந்த விஐபி இருக்கைகளில் எவர் இருந்தார்கள் என பார்த்திருக்கலாம். சிறப்பு அழைப்பாளர்களான இதழாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மட்டுமே. சிறப்பு அழைப்பாளர்களுக்கு, அவர்கள் அழைக்கப்பட்டார்கள் என்பதனால் இருக்கை வசதி அளிக்கவேண்டியது அமைப்பாளர் பொறுப்பு. ஆகவே அந்த ஏற்பாடு.
சிறப்பு அழைப்பாளர்களாக அமைப்பாளர்களால் அழைக்கப்பட்ட எழுத்தாளர்கள் அனேகமாக எவருமே வரவில்லை என்பதனால் இறுதியில் பிறரே அவ்விருக்கைகளில் அமர்ந்தனர்.தப்பித்தவறி எழுத்தாளர்கள் வந்து அவர்களுக்கு சிறப்பு இருக்கை அளிக்கப்படவில்லை என்றால் நீங்கள் வேறு ஒரு கேள்வியை கேட்டிருப்பீர்கள்.
--
சென்னையிலேயே சினிமாக்கள் சரியான நேரத்துக்குத்தான் தொடங்குகின்றன. சரியான நேரத்துக்கு தொடங்குவது ஏற்கனவே வந்திருப்பவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது. வராதவர்கள், வருவார்களா என தெரியாதவர்கள் கண்முன் இல்லாதவர்களுக்கு அளிக்காத வாக்குறுதியை நிறைவேற்றுவதைவிட வந்து கண்முன் அமர்ந்திருந்தவர்களுக்கு அளிக்கும் வாக்குறுதியை நிறைவேற்றுவதுதானே சிறப்பானது?
---
கட்டண உரை இணையத்தில் – கடிதங்கள்
ஆனால் மின்வடிவில் அல்லது வேறேதேனும் வடிவில் உரையை கேட்பதற்கும் நேரில் கேட்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. நாடகங்களைப் பார்க்கும் வழக்கம் உள்ளவர்களுக்குத் தெரியும், நாடகம் சினிமாவைவிட பலமடங்கு தீவிரமான அனுபவம் என. ஏனென்றால் நம் முன் ஒரு மனிதன் தன் உணர்வுகளுடனும் கருத்துக்களுடனும் நின்றிருக்கிறான் என நம் ஆழுள்ளத்திற்குத் தெரியும். நாம் அவனை கூர்ந்து பார்ப்பது உயிரின் அடிப்படை இயல்பு. மேடைப்பேச்சில் இரண்டரை மணிநேரம் ஒருவரை கூர்ந்து நோக்கி அவர் சொல்வதை புரிந்துகொள்கிறோம். அந்தக் கூர்வு பிற வடிவுகளில் இருக்காது. அது நிகரிப்பாவை என நமக்குத்தெரியும். கற்பனையால் அதை மனிதர் என உருவாக்கிக்கொள்கிறோம். அதற்கு ஓர் எல்லை உண்டு. ஆகவேதான் கலைகளில் உயர்ந்தது மேடைப்பேச்சே என்றும் நாடகமே மேடைப்பேச்சின் இன்னொரு வடிவமே என்றும் அரிஸ்டாடில் கருதுகிறார்.
என் உரை சிறந்ததா என தெரியவில்லை, ஆனால் அதன் எல்லைக்குள்ளேயேகூட அது கூரிய சிந்தனைகளையும் உணர்வுகளையும் அளிக்கத்தக்கது. நீங்களே எண்ணிநோக்குக, நீங்கள் பல ஆண்டுகளுக்கு முன் கேட்ட உரைகளைக்கூட மறந்திருக்க மாட்டீர்கள். பல நூல்கள் முற்றாகவே மறந்துவிட்டிருக்கும். உரையை நேரடியாகக் கேட்பதற்கு நிகரே இல்லை.
--
ஆனால் ஒரு கட்டண உரையில் நீங்கள் புதிதான ஒரு thought process-ஐ create செய்கிறீர்கள். முக்கியமான வித்தியாசம் நீங்களே விரும்பினாலும் அதே version-ஐ உங்களாலேயே எங்கும் recreate செய்ய முடியாது (கட்டுரை வடிவில் நீங்களே எழுதினால் ஒழிய..). அங்கொன்றும் இங்கொன்றுமாக ideas எடுத்து கையாளப்படலாமே ஒழிய, அதே உரை இன்னொரு முறை நிகழாது.
இத்தகைய உரை அதன் ஒரிஜினல் form-ல் dvd ஆகவோ, கட்டுரையாகவோ புத்தகமாகவோ ஆவணப்படுத்தப்பட வில்லையென்றால், 300 ஜோடி செவிகளுக்கு அப்பால், it is lost forever.. யார் எவ்வளவு இதைப் பற்றி எழுதினாலும் அவை எல்லாம் அவருடைய interpretations மட்டுமே.
கட்டணம் என்பது discerning audience-ஐ பெறுவதற்காக என்பதும் புரிகிறது. ஆகையால் இத்தகைய உரைகள் paid live broadcast-ஆகவோ, paid download link-ஆகவோ, dvd ஆகவோ விருப்பமுள்ளவர் அனைவருக்கும் கிடைக்கும்படி ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். தொலைத் தொடர்பு என்பது இத்தனை சுலபமாக இருக்கும் கால கட்டத்தில், physically வேறோர் இடத்தில் இருப்பது என்பது ஒரு knowledge seeker-ஐ பழங்காலம் போல் இத்தனை limit செய்யக் கூடாது.
கல்பனா ஜெயகாந்த்.0கருத்துத் தெரிவி
மலேசியாவில் கூலிம் இலக்கிய முகாமில் சென்ற ஆண்டு டிசம்பர் 20 முதல் 22 வரை நிகழ்ந்த உரைகளின் தொகுதி. நான் நான்கு உரைகள் ஆற்றியிருக்கிறேன். பேருரைகள் அல்ல. ஒருவகை பயிற்சி உரைகள்.மரபு இலக்கியம் – ஜெயமோகன்நாவல் எனும் கலை – ஜெயமோகன்இலக்கிய விமர்சனம் – ஜெயமோகன்உலக இலக்கியம் – ஜெயமோகன்நாட்டார் வழக்காற்றியல் – சு.வேணுகோபால்மலைக்காடு நாவல் விமர்சனம் – சு.வேணுகோபால்அக்கினி வளையங்கள் – சு.வேணுகோபால்பேய்ச்சி – அருண்மொழி நங்கைவல்லினம் பரிசுக்கதைகள் – சு.வேணுகோபால்மலேசியாவின் சமகால கவிதைகள் – சாம்ராஜ்0கருத்துத் தெரிவி
- உரை வலையேற்றம் செய்யப்பட்டபோது ஊட்டியில் வைத்து உரையைப் பார்த்தேன். நன்றாகவே இருந்தது. முதல் பத்துநிமிடங்களுக்குப்பின் நாவல் பற்றியநினைவு அவளை இழுத்துக்கொண்டுச் சென்றுவிட்டதைக் காணமுடிந்தது.
ம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்0கருத்துத் தெரிவி
- ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரைஆனந்த ரங்கப்பிள்ளை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் பெருமிதம்ஆனந்த ரங்கப்பிள்ளை பற்றி எழுத்தாளர் இமயம் சிறப்பு பேச்சுஆனந்த ரங்கப்பிள்ளை பற்றி கவிஞர் அ.வெண்ணிலா அவர்களின் சிறப்புஆனந்த ரங்கப்பிள்ளை பற்றி டாக்டர்.மு.ராஜேந்திரன் IAS சிறப்பு பேச்சு0
கருத்துத் தெரிவி
https://www.jeyamohan.in/127879
வழக்கமாக சினிமாப்பேட்டிகளை தவிர்த்துவிடுவேன். இதில் ஒரு தவறு நடந்துவிட்டது. வேறு ஒரு சேனல்காரர்கள் அவர்கள் தொடங்கி ஓராண்டு ஆகிறது, ஒரு வாழ்த்து வேண்டும், ஒருநிமிட ‘பைட்’தான் என்றார்கள். ஒப்புக்கொண்டேன். இவர்கள் அழைக்க அதை அவர்கள் என எண்ணி வரச்சொல்லிவிட்டேன். வந்தபின் தவிர்க்க முடியவில்லை
சென்னை ரெயின்ட்ரீ ஓட்டலில் எடுக்கப்பட்ட பேட்டி, ஓரளவு இலக்கியம் பற்றியும் கேட்டார்கள்.
ஜெ0கருத்துத் தெரிவி
- ஆற்றூர் ரவிவர்மாவின் அஞ்சலிக்கூட்டத்தில் ஆற்றிய உரை. திரிச்சூர் சாகித்ய அக்காதமி விழாவில் Aug 7, 2019 அன்று நடந்த அஞ்சலிக்கூட்டம் இது. கே.சச்சிதானந்தன், கே.ஜி.சங்கரப்பிள்ளை முதலிய இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பேசினர். ஆகவே சுருக்கமான உரை0
கருத்துத் தெரிவி
23- 11-2019 அன்று சென்னையில் ஆத்மாநாம் விருது கவிஞர் வெயிலுக்கு வழங்கப்பட்டபோது ஆற்றிய உரை .கவிஞர் வெய்யில் எழுதிய “அக்காளின் எலும்புகள்” கவிதைத் தொகுப்பு கவிதை விருது”க்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது
உரையை எழுதியளிக்கவேண்டும் என ஸ்ரீனிவாசன் நடராஜன் கேட்டார். ஆகவே எழுதி அளித்தேன். ஆனால் பேசியது வேறொன்று. ஆகவே இரு உரைகள் – ஒன்று வரலாறு இன்னொன்று யதார்த்தம்
ஆத்மாநாம் விருது பெற்ற கவிஞர் வெயிலை வாழ்த்தி 23-11-2019 அன்று சென்னையில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்
//“என்னென்னு சொல்றது நான் அந்த கடையிலயும் வீட்லயும் சாணி அள்ளிப்போட்டு பொட்டலம் மடிச்சு ராத்திரி கடையை கூட்டி பெருக்கி அந்த மளிகைக்கடை குப்பைக்குள்ளேயே படுத்து தூங்கி எந்திரிச்சவன். அவ சின்ன நாள்லயே கார்ல பள்ளிக்கூடத்துக்கு போனவ. முந்நூறு பவுன் நகைய போட்டு எனக்கு கெட்டிக்குடுத்தார் அவங்கப்பா .வீடு இருந்திச்சு. வாடகைக்கு பத்து வீடு விட்டிருந்தார். தோப்பு உண்டு. அவளுக்க கூடப்படிச்ச பொண்ணுகள்லாம் கோட்டு சூட்டு போட்டுகிட்டு அமெரிக்க ஆப்பிரிக்கான்னு போனாளுக. அப்படி இவ போயிடக்கூடாதுங்கறதுக்காகதான் அவங்கப்பா எனக்கு கட்டி வெச்சாரு. அந்த மளிகைக் கடையில அந்த ஊர்ல அவளக் கட்டிப்போடக்கூடியது அவங்கப்பால்ல நானாக்கும்னு நெனச்சிகிட்டா. அங்க தொடங்கினது எல்லாம். என் வாழ்க்கைய அழிச்சவன் நீ அதுதான் மொத ராத்திரில எங்கிட்ட சொன்னது. கடைசி வரைக்கும் அதேபேச்சுதான்”
இரண்டு குழந்தைகள் மாமனார் இறந்துவிட்டார். திடீரென்று ஒரு நாள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்னைக்கு சென்றுவிட்டாள் கூடவே மாமியாரும். தேடிச்சென்றால் தெரிகிறது அவள் பெயரில் உள்ள சொத்துகளில் பெரும்பாலானவற்றை ஏற்கனவே விற்றுவிட்டிருந்தாள். சென்னையில் ஒரு அபார்ட்மெண்ட் வாங்கியிருந்தாள். பலமுறை கெஞ்சி கூத்தாடியும் இங்கே வரவில்லை ஆகவே இங்கே இவர் மளிகைக்கடையை பார்த்துக்கொண்டு இங்கு இருந்தார். அந்தம்மாள் சென்னையில் வேறொரு வாழ்க்கையை தொடங்கினார். மிக விரைவிலேயே விவாகரத்துக்கான நோட்டீஸ் வந்தது. அவளுக்கு இன்னொரு காதல் தொடர்பும் இருப்பது உறுதியாயிற்று .வழக்கு சென்னையில் நடக்கிற்து அதற்காக சென்று கொண்டிருக்கிறார். மளிகைக்கடையும் உடனடியாக காலி செய்யவேண்டும் என்று நோட்டீஸ் வந்திருக்கிறது.
இதை ஏன் சொல்லுகிறார் என்று திகைப்பு ஏற்பட்டது .ஆனால் ஒவ்வொரு முறையும் மிக அந்தரங்கமான வாழ்க்கைக் கதையை ஏதோ ஒருவர் சொல்லாமல் இருப்பதில்லை. மிக அந்தரங்கமான ஒன்றை எடுத்து வெளியே வைப்பதற்கு எல்லாரும் விரும்புகிறார்கள். முற்றிலும் தெரியாதவர்களிடம் எடுத்து வைக்கும்போதுதான் சொன்ன நிறைவு ஏற்படுகிற்து போலும்.
அவர் சொன்னார். ”இன்னும் எத்தன நாள்னு தெரியாது. நானும் சரக்கு ஒவ்வொண்ணா கொறச்சுட்டு வாறன் .கடையை கொடுத்துர வேண்டியதுதான். இருபத்தெட்டு வருசமா நான் நின்ன கடை. ஆனா தொழில் இருக்கு நம்ம கையில. ஒத்த பைசா இல்லாம வேறெங்க போனாலும் இன்னொரு தொழில உருவாக்கிக்குவேன். ஒரு கடை வெச்சு சம்பாரிக்கறது ஒரு காரியமில்ல. ஆனால் பிள்ளகள நெனச்சாதான்…” என்று சொல்லி வரும்போது இடை வெளிவிட்டு அழுகையை அடக்கி கைகளை கட்டி ஒருகணம் உறைந்து உடல் தசைகளை எல்லாம் இறூக்கி அமர்ந்திருந்தார் உடனே நிமிர்ந்து சிரித்து வேடிக்கையாக சொன்னார். ”அந்த சொப்ப்னம் கலஞ்சதுக்கு பிறகு ஒருமாதிரி நல்லாத்தான் இருக்கு” என்றார்
நான் அந்த சிரிப்பு என்ன என்று தான் யோசித்தேன். மிக அந்தரங்கமான ஆழமான ஒன்றை சொல்லும்போது அதை ஏன் சிரிப்பில் கொண்டு முடிக்க வேண்டியிருக்கிறது? அந்த சிரிப்பு எதை நிகர் செய்கிறது?
யோசித்து பார்த்தால் அது இந்த காலகட்டத்தின் ஒரு பிரச்னை .நூறண்டுகளுக்குமுன் அவர் அதை ஒரு சாவடியில் அமர்ந்து சொல்லியிருந்தால் பெரியவர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லியிருப்பார்கள். வழக்கமான வரிகளாகத்தான் இருக்கும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். நாம் செய்ததன் பலனை அறுவடை செய்கிறோம். அவர்கள் செய்ததன் பலனை அவர்கள் அறுவடை செய்வார்கள். எது வந்தாலும் கடவுளை பிடித்துக்கொள். எதுவுமே நிலையானதல்ல. இன்றைக்கு பெரிதாக தெரிவது நாளைக்கு சிறிதாகிவிடும் .மனித வாழ்க்கையில் எப்போதுமே மீட்சிக்கும் ஆறுதலுக்கும் இடமிருக்கிறது …..நானே அத்தனை ஆறுதல் மொழிகளை பலமுறை கேட்டவன்தான்
ஆனால் அந்த ரயில் பெட்டியிலிருந்து அப்படி ஒரு வார்த்தை கூட எழவில்லை. துணுக்குற்றவர்கள் போல அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கேட்டுக்கொண்டிருந்தவர்களில் இருவர் வயதானவர்கள். அவர்களுக்கும் ஒன்றும் சொல்லத்தோன்றவில்லை. ஒருவேளை தங்கள் வாழ்க்கையை எண்ணிக்கொண்டார்களோ என்னவோ .நானும் எதையும் சொல்லவில்லை. அத்தனை அந்தரங்கமான நெகிழ்ச்சியான கொந்தளிப்பு ஒன்று சொல்லப்பட்டதும் உருவானது ஒரு ஒவ்வாமையும் பதற்றமும்தான். சீக்கிரம் அவர் சொல்லி முடித்துவிடவேண்டும் என்றும் சீக்கிரம் அதிலிருந்து வெளியே வந்துவிடவேண்டும் என்பதும் தான்
இது எப்படி நிகழ்கிறது? இன்னொருவருடைய துயரம் ஏன் அந்த விலக்கத்தை உருவாக்குகிறது? நாம் ஒவ்வொருவரும் தனிமனிதர்களாகிவிட்டோம் .நமக்கு நம்முடைய பிரச்னைகள், நம்மைச்சார்ந்தவர்களுடைய பிரச்னைகள் மட்டுமே மொத்தமாக தெரிகின்றன. அதற்கப்பால் ஒரு பிரச்னை நமக்குத்தெரியவேண்டுமென்றால் அது நம்மையும் நேரடியாகப் பாதிக்கக்கூடிய பிரச்னையாக இருக்கவேண்டும். பிறன் துயரம் பிறன் துயரமேதான். நம் துயரம் அல்ல அது. மானுடர்கள் ஒற்றைத் திரளாக வாழ்ந்த அந்த காலத்தில் பிறன்துயரம் நம் துயரமாக இயல்பாகவே மாறியது .அனைத்து மானுட துயரங்களோடும் நம்மால் இணைய முடிந்தது.
அன்று ஒருவருக்கு கிடைக்ககூடிய செய்திகள் அவருடைய சுற்றத்தை சார்ந்தவையாகத்தான் இருந்திருக்கும். இன்று துயரங்களின் அழிவுகளின் சித்திரம் உலகம் முழுக்க இருந்து நமக்கு கிடைக்கிறது. சிரியாவில் ஒரு குழந்தை சாகிறது. ஆஸ்திரேலியாவில் காடு பற்றி எரிகிறது. நமக்கு ஒன்றுமில்லை .
இந்த விலக்கம் இந்த உணர்ச்சியின்மை கலைஞனில் ஒரு விந்தையான உணர்வை உருவாக்குகிறது. தன்னுடைய ஆழத்தை கொந்தளிப்பை தனிமையை வலியை அவன் சொல்லி முடித்த உடனேயே கண்ணைத் துடைத்துக்கொண்டு அவன் சிரித்தாகவேண்டியிருக்கிறது. அதை சொல்வதற்கே உணர்ச்சியற்றதும் தன்னை நோக்கிய எள்ளல் கொண்டதுமான விளையாட்டுத்தனமான ஒரு மொழியை அவன் பழகிக்கொள்ள வேண்டியிருக்கிறது.//0கருத்துத் தெரிவி
- ஆலமர்ந்த ஆசிரியன் | ஜெயமோகனைப் பற்றி ஜெயகாந்தன்0
கருத்துத் தெரிவி
ஏற்றுகிறது



கருத்துத் தெரிவி